Tuesday, 6 March 2018

கீழே விழுந்து அடிபட்டு உடலில் காயம் ஏற்பட்டால் திரிபலா சூரணத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து இதில் தெளிவான கசாயத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.இதன் மூலம் காயத்தை கழுவி பின்னர் திரிபலா சூரணத்தை காயத்தின் மீது தூவி விட வேண்டும். இவ்வாறு செய்தால் காயம் வேகமாக குணமடைந்து வரும்.
:-
• அடிபட்ட காயத்தில் ரத்தக் கசிவு அதிகமாக இருந்தால் லாக்ஷா(அரக்கு) என்ற ஆயுர்வேத சூரணத்தி காயத்தில் வைத்து கட்ட வேண்டும்.
:-
• சளி, இருமலுக்கு தாளி சாதி சூரணத்தை குழைத்து தேனில் அடிக்கடி கொடுக்கலாம்.
:-
• இருமலுக்கு ஆடாதோடை கசாயத்தை தேனுடன் அடிக்கடி குடித்து வரலாம்.
:-
• கண் சிவந்து இருந்தால் கண்ணில் தாய் பால் விடவும். படிகப் பன்னீரை கண்களில் இடலாம்.
:-
• புண்கள் குணமடைய வேப்பிலை, மஞ்சள்,ஆலம் பட்டை, அரசம் பட்டை ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட கசாயம் மூலம் காயத்தை கழுவ வேண்டும். பின்னர் திரியலாசூரணத்தை புண்ணுக்கு மருந்தாக போடலாம்.
:-
• வெள்ளைபடுதலுக்கு கீழா நெல்லி கசாயம் மற்றும் நெல்லிக்காய் தூளில் பனை வெல்லம் கலந்து சாப்பிடலாம்.    


இரைப்பு / இழுப்பு
இதை இரைப்பு என்பதற்கு பதில் "வீசிங்" (Wheezing) என்றால் தான் பலருக்கு புரியும்! குழந்தைகளை பெரும்பாலும் பாதிக்கும் காற்றுக்குழாய்களின் அடைப்பினால் ஏற்படும் "விசில்" போன்ற சப்தம், நாதத்துடன் தொண்டையிலிருந்து எழும்பும்.
சுவாசக்குழாய்களின் அடைப்பு அல்லது ஆஸ்த்துமாவில் ஏற்படுவது போல் சுவாசக்குழாய்கள் சுருங்குவது வீசிங் ஏற்பட காரணங்கள். இரைப்பு அடிக்கடி ஏற்பட்டால் அதன் காரணம் ஆஸ்துமா தான். வீசிங் ஏற்பட்டால், மூச்சு விடுவது சிரமமாகும். ஆஸ்துமா இல்லாமலும் வீசிங் ஏற்படலாம். வீசிங் தாக்குதலின் போது ஒரு கிராம்பை நாக்குக்கு அடியில் வைத்து கொண்டால் சிறிதாவது நிவாரணம் கிடைக்கும். புதினா இலையுடன் கருமிளகுப்பொடியை கலந்து வாயில் போட்டு சிறிது மென்று சாப்பிடலாம். மஞ்சள் பொடி, தேனை குழைத்து நாக்கில் தடவலாம்.

No comments:

Post a Comment