Monday, 2 April 2018

சதகுப்பை

பசியின்மை மற்றும் செரிமானம் சம்பந்தமான பிரச்சனைகளை குணமாக்கும் அற்புத மூலிகை சதகுப்பை


1. பசியைத் தூண்டி செரிமான சக்தியை அதிகரிக்கும்.
2. ஜீரண மண்டலம் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கு மிகச்சிறந்த தீர்வு சதகுப்பை மூலிகை.
3. சுவை மண்டல கோளாறுகளையும் குணமாக்க வல்லது.
4. வாய் துர்நாற்றத்தைப் போக்கும்.
5. தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டிய மூலிகை சதகுப்பை.
6. விக்கல் சம்பந்தமான பிரச்சனைகளை குறைத்து விக்கலை இயற்கையாக குணமாக்கும்.
7. எலும்புகளை ஆரோக்யமாக வைத்திட உதவும்.
8. குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் புழுக்களை வெளியேற்றி ஆரோக்யமாக வளர உதவும்.
9.மாத விலக்கு வலிகளை நீக்கும் மருத்துவ தன்மைக் கொண்டது சதகுப்பை மூலிகை.   


100 வயாகராவுக்கு சமமான ஜாதிக்காய் பற்றி தெரியுமா?


ஜாதிக்காய் என்பதற்கு குலக்காய், அட்டம், அட்டிகம் என்கின்ற வேறு பெயர்கள் இருக்கின்றன.

1. இது ஜீரணத்திற்கு மிக சிறந்த மருந்தாகும்

2. முகத்தை அழகாக்கும்: ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், முகத்தில் உள்ள கரும் தழும்புகள் மீதும் பூசிவந்தால் பருக்கள் நாளடைவில்
மறையும், முகம் பொலிவடையும். ஜாதிக்காயினை அரைத்து தயாரித்த பசை தேமல், படை போன்ற தோல் வியாதிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

3. தசைப்பிடிப்பை நீக்கும்: ஜாதிக்காயின் விதை வாந்தியை தடுக்கக் கூடியது. ஜீரணத்தை சக்தியை அதிகரிக்கும். தசை வலியினைப் போக்குகிறது. விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் மூட்டுவலி, பக்கவாதம் ஆகியவற்றிற்கு பயன்படுகிறது.

4. ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் போட்டு தூளாக இடித்து, மாச்சல்லடையில் சலித்து ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு மூடி வைத்துக் கொண்டு, காலை மாலை இரண்டு சிட்டிகையளவு தூளை எடுத்து, ஒரு டம்ளர் காய்ச்சிய பசும்பாலில் போட்டுக் கலக்கி 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆண் மலடு நீங்கும்.

5. ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில்வறுத்து இடித்து பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். 5 கிராம் சூரணத்தை காலை, மாலை பசும் பாலில் காய்ச்சி குடிக்கவும். இது ஆண்மை குறைவை போக்கும். நரம்புதளர்ச்சியை போக்கும். நீர்த்துப் போன விந்தினை கெட்டிப்படுத்தும். விந்தில் உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.
விந்து முந்துதலை தவிர்க்க மூலிகைகள் பலஉள்ளன, அதில் மிக எளிதாக மிகவும்பயனுள்ள மூலிகை ஜாதிக்காய். தாம்பத்தியம் தொடர்பான பிரச்சனைகளுக்கு ஜாதிக்காய் உபயோகித்தாலே போதும்   

எல்லாவித தோல் நோய்களையும் தீர்க்கும் சங்கன் குப்பி மூலிகை! 


இதை, ‘தோல் நோய் மருத்துவர்’ என்று கூடச் சொல்லலாம். கரப்பான், காளாஞ்சகப்படை (சொரியாசிஸ்), விஷக்கடி, ஊறல், தடிப்புகள் போன்ற அனைத்துவிதமான தோல் நோய்களுமே ‘அலர்ஜி’யால்தான் வருகின்றன என்று ஆங்கில மருத்துவத்தில் காரணம் சொல்வார்கள். பாரம்பர்ய மருத்துவத்தில், இவை விஷத்தால் உண்டாகிறது எனக் கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், சங்கன் குப்பி இலைகளைப் பறித்துச் சிறிது மோர் அல்லது நீராகாரம் விட்டுத் துவையல்போல அரைத்து, 40 நாள்கள் வரை தினமும் காலையில் மட்டும் வெறும் வயிற்றில் சிறு நெல்லிக்காயளவு உண்டுவந்தால் ரத்தம் சுத்தமாகி தோல் நோய்கள் குணமாகத் தொடங்கும்.

சங்கன் குப்பி இலைகளைப் பச்சையாக அரைத்துக் கரப்பான், படைகள் மீது பூசி, அரை மணி நேரம் கழித்துக் கடலைமாவு அல்லது பாசிப்பயறு மாவு தேய்த்துக் குளித்து வந்தால் குணமாகும்.
சங்கன் குப்பி இலைகளைத் தண்ணீரில் போட்டுச் சூடுபடுத்தி மிதமான சூட்டில் குளித்து வந்தால், உடலில் ஏற்படும் சொறி, எரிச்சல் ஆகியவை குணமாகும். 


மனநோயை, கருப்பை கட்டிகளை குணமாக்கும் தொட்டால் சிணுங்கி!


1.தொட்டால் சிணுங்கி இலையை 15 கிராம் அளவு எடுத்து நன்றாக அரைத்து இரவு பாலுடன் கலந்து குடித்து வந்தால் ஆண்மை சக்தி பெருகும்.

2.தொட்டால் சிணுங்கி இலையைக் களிமண்ணுடன் அரைத்து பற்றிட வாத வீக்கும் கரையும். கீழ்வாதம் கரையும். இதன் வேரையும் இலையையும் சம அளவில் எடுத்து உலர்த்தி துணியில் சலித்து வைக்கவும், இந்த சூரணம் 10-15 கிராம் பசும்பாலில் குடிக்க சிறு நீர் பற்றிய நோய்கள், மூலச்சூடு, ஆசனக்கடுப்பு தீரும். 10 முதல் 20 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட உடலில் கிளர்ச்சி பெருகும். சிறுநீர் கல் கரையும் தொட்டாற் சுருங்கி மேகமூத்திரத்தை நீக்கும், பெண் வசியம் செய்யும்,

3.உடலில் ஓடிக் கண்டுகின்ற வாதத் தடிப்பைக் கரைக்கும் ஒரு பலம் தொட்டாற்சுருங்கி வேரினை பஞ்சுபோல் தட்டி ஒரு மண் குடுவையில் போட்டு கால் படி தண்ணீர் விட்டு அடுப்பிலேற்றி சுண்டக் காய்ச்சவும், பின்னர் இதனை வடிகட்டி வேளைக்கு கால் அல்லது அரை அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை கொடுக்கவும். அல்லது ஒரு பங்கு இலைக்கு 10 மடங்கு கொதிக்கின்ற தண்ணீர் விட்டு ஆறின பின் வடிகட்டி வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை கொடுக்கவும் . இவற்றால் நீர் அடைப்பு, கல்லடைப்பு தீரும்.

4.ஆண்மை பெருகும் ஆண்மைக்குறைபாடு உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து பாலில் 15 கிராம் கலந்து சாப்பிடவேண்டும். தொடர்ந்து 15 நாட்களுக்கு சாப்பிட்டு வர ஆண்மை பெருகும். சூடு பிடித்து சிறுநீர் எரிச்சல் உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து 5-6 நாள் 10 கிராம் காலை தயிரில் சாப்பிட வேண்டும் இதனால் சூடு குறைந்து சிறுநீர் எரிச்சல் குணமாகும்.

5.இதன் இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும். உடல் குளிர்சியடையும், வயிற்றுப்புண்ணும் ஆறும். மூலநோய் நீங்கும் இதன் இலையையும் வேரையும் உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு பசுவின் பாலில் போட்டுக் கொடுத்துக் கொண்டு வர மூலம், பவுத்திரம் போம்.

6.இதன் இலைச் சாற்றைப் பவுத்திர மூல ரணங்களுக்கு ஆசனத்தில் தடவி வர ஆறும். இதன் இலையை மெழுகு போலரைத்து விரை வாதம், கை,கால் மூட்டுக்களின் வீக்கம் இவைகட்கு வைத்துக் கட்ட குணமாகும்.

7.இதன் இலைச் சாற்றைப் பஞ்சில் தோய்த்து ஆறாத ரணங்களுக்கு உட செலுத்தி வைக்க ஆறிவரும். இதன் இலையை ஒரு பெரிய மண்கலயத்தில் போட்டு தண்ணீர் விட்டு வேக வைத்து இடுப்பிற்குத் தாங்கும்படியான சூட்டில் தாரையாக விட இடுப்பு வலி, குணமாகும்.   

டெங்கு மற்றும்  சிக்கன்குனியாவை விரட்டியடிக்கும் அற்புத மூலிகை  பேய்விரட்டி

1.கொசுக்கள் வராமல் தடுத்து, கொசுக்களால் வரும் டெங்கு, சிக்கன்குனியா போன்ற  தொற்று நோய்களிலிருந்து காப்பாற்றும்.

2.தொற்று நோய் கிருமிகளை அழித்து விஷக்காய்ச்சல் வராமல் தடுக்கும்.

3.டெங்கு, சிக்கன்குனியா காய்ச்சலால் ஏற்பட்ட பக்க விளைவுகளை குணமாக்கும்.

4.வயிறு மற்றும் பெருங்குடல்சம்பந்தமான அனைத்து உபாதைகளையும் படிப்படியாகக் குணமாக்கும்.

5.மனோவியாதிகளையும் குணமாக்கும் தன்மைக் கொண்டது பேய்விரட்டி.

6.ஒற்றைத்தலைவலி, தலைபாரம் போன்ற தலை சம்பந்தமான வலிகளுக்கு ஒரு சிறந்த மருந்து. 


சிறுநீரக செயலிழப்பு மற்றும் கல்லீரல் செயலிழப்பை குணமாக்கும் கீழாநெல்லி 


1.சிறுநீரக செயலிழப்பு மற்றும் கல்லீரல் செயலிழப்பை சரி செய்ய வல்லது கீழாநெல்லி.
2.தீராத ஈரல் நோய்களை குணமாக்கிடும் அற்புத மூலிகை கீழாநெல்லி.
3.கண் கோளாறுகளுக்கும், ரத்தகுழாய் சம்பந்தமான பிரச்சனைகளுக்கும் மிகச்சிறந்த மருந்து இந்த கீழாநெல்லி.
4.சிறுநீரக செயலிழப்பு மற்றும் கல்லீரல் செயலிழப்பை சரி செய்ய வல்லது கீழாநெல்லி.
5.விந்தணு குறைபாட்டை சரிசெய்து ஆண்களின் குழந்தையின்மை பிரச்சனைக்கு தீர்வளிக்கும் அருமருந்து கீழாநெல்லி.
6.சர்க்கரை நோயும் அதன் பக்க விளைவுகளையும் கட்டுப்படுத்தி ஆரோக்யமாக வைத்திடும்.
7.குழந்தைகளுக்கு பசியின்மையை போக்கி பசியை தூண்டி உடல் வளர்ச்சிக்கு வித்திடும்.         

சிறுநீரகத்தை சீராக்கும் பொங்கல் பூ, சிறு பீளை -


சிறுகண் பீளைச் செடிகளைப் பச்சையாகச் சேகரித்து… சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, உரலில் இடித்து அல்லது மிக்ஸியில் அரைத்து பிழிந்து பிறகு சாறு எடுக்க வேண்டும். இச்சாற்றை ஒரு வேளைக்கு 50 மில்லி என்ற அளவில் காலை, மாலை இரு வேளைகளிலும் குடித்து வந்தால்… கல்லடைப்பு, நீரடைப்பு, நீர்த்தாரை எரிச்சல் ஆகியவை குணமாகும். பெண்களுக்கு ஏற்படும் அதி ரத்தப்போக்கு எனும் பெரும்பாடு நோயும் குணமாகும். இச்செடியின் வேரை சுத்தமாகக் கழுவி நிழலில் காய வைத்துக்கொண்டு… கஞ்சி காய்ச்சும்போது 10 கிராம் வேரையும் சேர்த்துக் காய்ச்சிக் குடித்து வந்தால், கர்ப்பிணிகளின் சோர்வு நீங்கும். கரு தங்காத பெண்களுக்குச் சிறந்த பலனைக் கொடுக்கும்.

சிறுபீளை சமூலம் (ஒரு மூலிகைத் தாவரத்தின் இலை, வேர், தண்டு உள்ளிட்ட அனைத்து பாகங்களும் மருத்துவத்துக்கு பயன்பட்டால் அதற்கு சமூலம் என்று பெயர்), சிறுநெருஞ்சி சமூலம், மாவிலிங்க வேர், பேராமுட்டி வேர் ஆகியவற்றில், வகைக்கு 25 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து, 4 லிட்டர் தண்ணீர் சேர்த்துக் காய்ச்ச வேண்டும். அது கால் லிட்டராகச் சுண்டியவுடன் எடுத்து வடிகட்டி ஒரு ஃப்ளாஸ்க்கில் வைத்துக் கொண்டு…ஒரு நாளைக்கு 3 முதல் 5 வேளைகள் குடித்து வர வேண்டும்.

அதோடு, ஒரு நாளைக்கு 3 முதல் 4 லிட்டர் வரை கொதிக்க வைத்து ஆறிய சீரகத் தண்ணீரையும் குடிக்க வேண்டும். இப்படி 5 முதல் 10 நாட்கள் வரை குடித்தாலே அனைத்து விதமான சிறுநீரகக் கற்களும் கரைந்து வெளியேறிவிடும்.

சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதால் சிறுநீரகத்தில் ஏற்படும் ‘ஹைட்ரோ நெஃப்ரோசிஸ்’ எனப்படும் சிறுநீரக வீக்கமும், கற்கள் அழுத்துவதால் ஏற்படும் வலியும், இக்குடிநீரால் மிக விரைவாகக் குணமாகிறது. அதிகமான கல்லடைப்பு வயிற்று வலியுடன் துடித்துக்கொண்டிருக்கும் நோயாளிகளுக்குக் கூட இக்குடிநீர் குடித்த 2 மணி நேரத்தில் வலி குறைந்துவிடும்.

ஒரு முள்ளங்கிக் கிழங்கு, 2 சின்ன வெங்காயம், அரைக் கரண்டி சீரகம், ஒரு கைப்பிடியளவு நீர்முள்ளி சமூலம் ஆகியவற்றை ஒன்றிரண்டாக இடித்து, மேற்குறிப்பிட்ட குடிநீர் சரக்குகளுடன் சேர்த்துக் கொதிக்க வைத்துக் குடித்தால் இன்னமும் சிறப்பான பலன் கிடைக்கும்.

ஆங்கில வைத்திய முறையில், ‘லித்தோடிரிப்சி’ எனும் சிகிச்சை முறை மூலம் சிறுநீரகக் கற்களைக் கரைப்பார்கள். இச்சிகிச்சை எடுத்துக்கொண்ட சிலருக்கு மீண்டும் மீண்டும் கற்கள் உருவாகும். அத்தகைய நோயாளிகளையும் மூன்று மாதங்களில் இக்குடிநீர் குணப்படுத்திவிடும். இக்குடிநீர் எடுத்துக்கொள்ளும் சமயத்தில் பால் பொருட்கள், தக்காளி, முட்டைக்கோஸ், காலிஃபிளவர் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. இக்குடிநீரை தொடர்ந்து குடித்து வந்தால் பித்தப்பை கற்களும் கரைகின்றன. ஆனால், வெரு நாட்கள் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.அதே நேரத்தில், பித்தப்பை கற்களால் ஏற்படும் வலி மற்றும் பிற அறிகுறிகள் விரைவாகக் குறையும்.         


புற்று நோய், தோல் நோய்களை, வெள்ளைப்படுதலை நீக்கும் வெள்ளறுகு!


குன்மமொடு வாய்வு குடல்வாதம்
சூலையிவை சென்மம்விட் டோடிச் சிதையுங்காண்  வன்முலையாய் ள்ளுறுகி ரந்திசொறி யொட்டிய
சிரங்குமறும்
 வெள்ளறுகு தன்னை விரும்பு
- அகத்தியர் குணபாடம்.

 வெள்ளறுகானது மலத்தை இளக்கி, வெப்பத்தை அகற்றி,பசியைத் தூண்டி, உடலை உரமாக்கும் செயலாக உடையது .இது காச்சல், வாதம்,தோல்வியாதி, வயிற்று உப்புசம், பாம்புக்கடி, அஜீரணம், நீரிழுவு மற்றம் தொழுநோய் ஆகிய நோய்களைக் குணப்படுத்த வல்லது. இதில் இரும்பு சத்து, பொட்டாசியம், சோடியம், கால்சியம், மெகனீசியம், சிலிக்கா, பாஸ்பேட். குளோரைடு, சல்பேட் மற்றும் கார்பனேட் உள்ளது..

வெள்ளறுகு செடியை வேறுடன் எடுத்து சுத்தமாகக்கழுவி இடித்து சாறு பிழிந்து இருபது மி.லி.. முதல் முப்பது மி,லி. வரை பாம்பு கடித்திருப்பவர்களுக்கு உள்ளே கொடுத்து கடிவாயில் செடியின் சக்கையை அரைத்து வைத்துக் கட்டியும் வர, இரண்டொருதரம் வாந்தி அல்லது பேதியாகும்.மீண்டும் ஒரு முறை கொடுக்க நச்சு இறங்கும்.புளி, உப்பு நீக்க வேண்டும்.

வெள்ளறுகு செடியை தேவையான அளவு எடுத்து வெந்நீர் விட்டு அரைத்து காலையில் சொறி, தினவு தவளைச சொறி சிரங்கு, மேகத்தடிப்பு, ஊறல் முதலியவை உள்ளவர்கள் பூசி, ஒரு மணி நேரம் சென்ற பின்னர் பேய் பீர்க்கங்காய் கூட்டால் உடலைத் தேய்த்துக் குளித்து வந்தால் அவை குணமாகும்.

வெள்ளறுகு செடியை எடுத்து சுத்தம் செய்து நன்றாக இடித்து அதனுடன் பத்து மிளகு, ஒரு துண்டு சுக்கு, நான்கு சிட்டிகை சீரகம் ஆகியவைகளைத் தட்டி மண் சட்டியில் போட்டு, எண்ணூறு மி.லி. நீர்விட்டு அதனை இருநூறு மி.லி.யாக வற்றும் வரை நன்கு காச்சி வடிகட்டி காலை, மாலை இரண்டு வேளை நூறு மி.லி வீதம் அருந்தி வர கீல்வாதம், நரம்புக் கோளாறுகள் முதலியவை கட்டுப்படும். வெள்ளறுகு பூண்டை அரைத்து சிறு சிரங்குகளுக்கும் பூசி வரலாம்.

பெண்களுக்கு மிகுந்த தொல்லை தருகின்ற நாட்பட்ட வெள்ளைப்படுதல்
நோய்க்கு வெள்ளறுகு செடியுடன் சிறிது மிளகு, ஒரு பல் பூண்டு சேர்த்து
அரைத்து பாலில் கொடுக்கலாம்.  தேவையான வெள்ளறுகை வெண்மிளகுடன் சேர்த்து அரைத்து குடநீரிட்டு வடிகட்டி கொஞ்சம் பசுவின் வெண்ணெய் கூட்டி உடல் சூடாக இருக்கும் போது அருந்து வர சூட்டைத் தணிக்கும். வெள்ளறுகு முழுச்செடியையும்  சீரகம் சேர்த்து சாப்பிட்டு வர நீரழிவு நோய் கட்டுப்படும்.




No comments:

Post a Comment