Friday, 2 March 2018

  பனங்கற்கண்டு


 அந்த காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் இந்த பனங்கற்கண்டை சளி மற்றும் இருமலுக்கு பயன்படுத்தினர். மேலும் இது தொண்டைக் கரகரப்பு, சளியை வெளியேற்றுதல் மற்றும் இருமல் குறைதல் போன்றவற்றை செய்கிறது. இதற்கு இதை நீங்கள் வாயில் போட்டு அந்த உமிழ் நீரை முழுங்கினால் போதும்.
#2:
உங்கள் வாய் துர்நாற்றம் வீசுகிறதா? கொஞ்சம் சீரகம் மற்றும் பனங்கற்கண்டை வாயில் போட்டு மென்று தின்றால் போதும் உங்கள் வாய் துர்நாற்றம் காணாமல் போகும்.
#3:
உங்களுக்கு எப்பொழுதும் சோர்வாக இருப்பது மாதிரி தோன்றுகிறதா? அதற்கு 1/2 டேபிள் ஸ்பூன் பசு மாட்டு நெய்யுடன் சிறிது பனங்கற்கண்டு மற்றும் சிறிது நிலக்கடலை சேர்த்து சாப்பிட்டால் போதும் மிகவும் சுறுசுறுப்பாக மாறிவிடுவீர்கள்.
#4:
தீராத சளி பிரச்சினை இருந்தால் அதற்கு 2 பாதாம் பருப்பு, 1 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு, 1/2 டேபிள் ஸ்பூன் மிளகுத் தூள் பொடி சேர்த்து மிக்ஸியில் போட்டு பொடி பண்ணி பாலுடன் கலந்து குடித்தால் போதும் உங்கள் சளி பிரச்சினை காணாமல் போகும்.
#5:
தொண்டைக் கட்டிக் கொண்டு பேச முடியாமல் கஷ்டப்படுகிறீர்களா? 1/2 டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள், 1/2 டேபிள் ஸ்பூன் நெய் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் தொண்டை வலி குணமாகும்.
#6:
சிறிது பனங்கற்கண்டு, பாதாம் பருப்பு மற்றும் சீரகம் சேர்த்து இரவில் படுப்பதற்கு முன் சாப்பிட்டு வந்தால் உங்கள் நினைவாற்றல் அதிகரிக்கும். மேலும் கண்பார்வை அதிகரிக்கும்.
#7 :
உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த பனங்கற்கண்டை பாதாம் மற்றும் மிளகுத் தூளுடன் சேர்த்து வாரத்திற்கு 2 முறை சாப்பிட்டால் போதும் உங்களை எந்த நோயும் அண்டாது.
#8:
2 டேபிள் ஸ்பூன் வெங்காய ஜூஸ் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டால் சிறுநீரகக் கற்கள் பிரச்சினை சரியாகும்.
இன்னும் ஏன் வெயிட் பண்ணுரிங்க இப்போதே இந்த மருத்துவ குணம் வாய்ந்த கற்கண்டை பயன்படுத்தி உங்கள் உடல் உபாதைகளிலிருந்து விடுபடுங்கள்.      

திரிபலா_பொடிதிரிபலா_சூரணம்

மலச்சிக்கல் தீரும், குடல் புண் ஆறும். இரத்தச் சோகை அதிக உடல் எடை குறையும். உடலில் அதிகப்படியாக உள்ள கொழுப்பு , வெளியேறும்.
நன்றாக காய வைத்த நெல்லி வற்றல்,கடுக்காய்த்தோல், மற்றும் தான்றிக்காய்த்தோல் பொடிகள் ,சம அளவில் கலந்ததே ,திரிபலா சூரணம்.
இதை, இரவில் ஒரு தேக்கரண்டி அளவு சுடுதண்ணீரில் கலந்து தினமும் சாப்பிட்டு வர , குடல் புண் ஆறும். இரத்தச் சோகை அதிக உடல் எடை குறையும்.உடலில் அதிகப்படியாக உள்ள கொழுப்பு , வெளியேறும்
உடல் முதுமை மாறி, இளமைப்பொலிவு ஏற்படும். மலச்சிக்கல் தீரும்.திரிபலாவில் க்ரீன் டீயை விடவும் அதிக ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் உள்ளதாக ஆய்வு கூறுகிறது
#ஆங்கில_மருந்துகள் #நிறைய #உட்கொள்பவர்கள், இம்மருந்தினை காலை- இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, ஆங்கில மருந்துகளால் உண்டாகும் பக்க விளைவுகளைக் குறைத்துக் கொள்ளலாம்.
திரிபலா குடல் அழற்சிக்குக்கூட நல்ல மருந்து.
திரிபலாவை புறக்காயங்களுக்கு மருந்தாகவும் பயன்படுத்தலாம். திரிபலா கலந்த கொதிக்கவைக்கப்பட்ட நீரால் காயங்களைக் கழுவதும் நல்ல பயன் தரும்.
அதேபோல வாய்ப்புண் வருகிற போதும் இதைப் பயன்படுத்தலாம்மேலும் சர்க்கரை நோய்க்கு இணை மருந்தாய் பயன்படுத்த லாம்
சளி பிடிக்கிறதுக்கு ஒரு நாலைஞ்சு மணி நேரத்துக்கு முன்னாடி பாத்தீங்கன்னா தொண்டை ஒரு மாதிரி கரகரக்கும். அப்பவே தெரியணும், நமக்கு நாளைக்கு சளி பிடிக்கப் போவுதுன்னு. அந்த மாதிரி நேரத்துல நான் என்ன செய்வேண்டுமென்றல், கொஞ்சம் திரிபலாவை எடுத்து சுடுதண்ணியில போட்டு, நல்லா வாய் கொப்பளிக்க . சளி வராது. தொண்டைக்கும் இதமா இருக்கும். பிள்ளை அவ்வப்போது பள்ளிக்கூடத்திலிருந்து கொண்டுவரும் மற்ற தொண்டை வலிகளுக்கும் இது நல்ல மருந்து. வாய் கொப்புளிச்சுத் துப்பத் தெரிந்த குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். முழுங்கினாலும் பெரிய பிரச்சினை இல்ல, இருந்தாலும் ரொம்ப சின்ன பிள்ளைங்களுக்கு வேணாம்.
சில நேரம் பல்லிடுக்கில் உணவுத் துகள் மாட்டிக் கொள்கிறது. காரட் துண்டு, ஆட்டுக்கறி இப்படி. அப்போது கவனிக்காம விட்டுட்டா, அடுத்த நாள் வலிக்கும். அப்போ அந்தத் துணுக்கை floss போட்டு எடுத்துட்டாலும் வலிக்கும். அந்த நேரத்தில் திரிபலாவை சுடுதண்ணியில போட்டு வாய் கொப்பளிச்சா, அல்லது அந்த இடத்தில் வைத்து லேசாக பல் தேய்ப்பது போலத் தேய்த்தால் வலி மாயமாய்ப் போகிறது. மற்ற வகை பல்/ஈறு வலிகளுக்கும் இதைப் பயன்படுத்திப் பார்க்கலாம்.
திரிபலா என்பது அற்புதமான ஆயுர்வேத மருத்துவத் தயாரிப்பு ஆகும். ஆயுர்வேத மருத்துவர்களால், உலகம் முழுவதும் பரவலாக எந்த நோய்க்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுவது திரிபலா. சர்க சம்ஹிதா என்னும் ஆயுர்வேத நூலில் முதல் அத்தியாயத்திலேயே திரிபலாவைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமான விஷயமாகும். நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய இம்மூன்றின் கலவையானது அற்புதமான காயகல்பமாகி, தேவர்களின் அமிர்தத்தினைப் போல் எந்த ஒரு வியாதியையும் தீர்க்கும் அற்புத சக்தியினைப் பெற்றுள்ளது.
ஆயுர்வேதத்தில் திரிபலா என்பது இளமையை பாதுகாக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது நமக்கு முதுமைத் தன்மையை நீக்கி இளமைத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் என்று பொருள். இது உடல் ஆரோக்கியத்தினை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டவும் உதவுகிறது. ஆரோக்கியமான வாழ்வில் நோய் எதிர்ப்புச் சக்தி என்பது ஒரு முக்கியமான அங்கமாகும். இது எப்போதுமே அதிகமாகவே இருக்க வேண்டும். நமது உடலில் இயற்கையாகவே அமைந்திருக்கும் தடுப்பு அரண்களைத் தாண்டி, உடலின் உள்ளே நுழையும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் ‘ஆன்டிபாடி’ (antibodies) எனப்படும் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிக அளவில் உற்பத்தி செய்ய, இந்த திரிபலா உதவுகிறது.
உடலில் செல்களுக்கிடையில் நடைபெறும் வளர்ச்சிதை மாற்றத்தில், சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்டாக திரிபலா செயலாற்றுகிறது. நமக்கு முதுமையைத் தரும் முக்கியமான காரணியான “கட்டற்ற காரணிகளை” (free radicals) உற்பத்தி செய்யும் வாய்ப்பைக் குறைக்கிறது. மேலும் செல்கள் முறையாகச் செயல்படுவதற்கு முக்கியமாகத் தேவைப்படும் மைட்டோகாண்டிரியா, கோல்கை உறுப்புகள், உட்கரு ஆகியவை சிறப்பாகச் செயல்படுவதையும் திரிபலா தூண்டுகிறது.
செரிமானக் கோளாறுகளை திரிபலா அற்புதமாக குணப்படுத்துகிறது. அதிலும் உணவுப்பாதையில், மலத்தினை வெளித்தள்ளும் குடலியக்கத்தை சீராக செயல்பட வைக்கிறது. மேலும் இரத்தத்தில் உள்ள கொழுப்பினை கரைக்க தேவைப்படும் பைல் (Bile) திரவத்தினை கல்லீரலிலிருந்து சுரக்கவும் உதவுகிறது. உணவுப்பாதையில் தேவையான கார அமிலநிலையை (pH level) தேவையான நிலையில் பேணுவதற்கும் துணை புரிகிறது.
திரிபலா ஒரு சிறந்த குடல் சுத்திகரிப்பானாகச் செயல்படுகிறது. மலச்சிக்கலுக்கு அதிகமாகப் பரிந்துரைக்கப்படும் இயற்கை மருந்து திரிபலாவாகும். உடலிலுள்ள நச்சுப்பொருட்களை நீக்கும் நச்சு நீக்கியாகவும் இது செயலாற்றுகிறது. சிறந்த மலமிளக்கியாகவும் பயன்படுகிறது.
வயிற்றில் பூச்சி வளர்வதையும், தொற்றுக்களையும் கட்டுப்படுத்தும் சக்தி வாய்ந்தது தான் திரிபலா. குறிப்பாக வயிற்றிலிருந்து நாடாப்புழுக்களையும், வளையப்புழுக்களையும் வெளியே அகற்றுவதற்கு பெரிதும் உதவுகிறது. மேலும் உடலில் பூச்சிகளும், நுண்கிருமிகளும் வளர்வதற்கு உதவாத நச்சு நிலையை உடலில் பேணுவதற்கு திரிபலா உதவுகிறது.
இரத்தத்தில் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையினை அதிகரிக்க திரிபலா உதவுகிறது. இதன் மூலம் இரத்த சோகை என்னும் நோயைத் தீர்க்க முடியும். (இரத்த சோகை என்பது இரத்தத்தில், ஹீமோகுளோபின் எனப்படும் இரத்த சிவப்பு அணுக்களின் அளவு குறைந்து காணப்படும் நிலையாகும்).
திரிபலா சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பு மிக்கது. நமது கணையத்தினைத் (pancreas) தூண்டி, இன்சுலினை சுரக்கச் செய்கிறது. கணையத்தில்தான் இன்சுலினைச் சுரக்கும் லாங்கர்ஹான் திட்டுக்கள் (langerhans) எனப்படும் சுரப்பிகள் உள்ளன. மேலும் உடலில் குளுகோஸின் அளவை சமநிலையில் பேணுவதில் பெரும் பொறுப்பு வகிப்பது இன்சுலின் ஆகும். மேலும் திரிபலா கசப்புச் சுவையுடன் இருப்பதனால், சர்க்கரை நோயின் ஒரு நிலையான ஹைப்பர்கிளைசீமியா (hyperglycemia) எனப்படும் அதிக சர்க்கரை நிலையில், இதனை எடுத்துக் கொள்வது சிறப்பானது.
இயல்பை விட உடல் பருமனானவர்கள், திரிபலாவை உட்கொள்வது மிகவும் பயன்தரும். இதனுடைய மருத்துவக் குணத்தினால் உடலிலுள்ள கொழுப்பின் அளவினைக் குறைக்க முடியும். நமது உடலில் கொழுப்பு படிவதற்குக் காரணமான அடிபோஸ் செல்களைக் குறி வைத்து செயல்படுவதால், கொழுப்பின் அளவு குறைகிறது. இதன் மூலம் உடல் பருமன் கட்டுப்படுத்தப்படுகிறது.
இது இரத்தத்தினைச் சுத்தம் செய்து இரத்தத்திலுள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றும் தன்மை கொண்டிருப்பதால், சரும நோய்களுக்கான மருத்துவத்தில் பெரும் பங்காற்றுகிறது. இரத்தத்தினைச் சுத்திகரிக்கும் தன்மை கொண்டிருப்பதால், தொற்று நோய்களையும் தீர்க்கும் குணம் கொண்டுள்ளது.
சுவாசப் பாதையிலுள்ள அடைப்புகளை நீக்கி சீரான சுவாசம் ஏற்பட பெரிதும் உதவுகிறது. சைனஸ் என்னும் நோயைத் தீர்க்கும் மருந்தாகவும் இது செயல்படுகிறது. மேலும் நமது சுவாசப்பாதையிலுள்ள சளியில் பாக்டீரியாக்கள் வளராமலும் இது தடுக்கிறது.
தலைவலிக்கு நிவாரணமாகவும் திரிபலா பயன்படுகிறது. குறிப்பாக வளர்சிதை மாற்றத்தின் இடையூறுகளால் உண்டாகும் தலைவலிக்கு சிறப்பான நிவாரணத்தை அளிக்கிறது.
புதுடில்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வுகளின் படி, திரிபலாவுக்கு புற்றுநோயைக் குணப்படுத்தும் திறன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் செல்களில் மைட்டேடிக் நிலையில் ஸ்பிண்டில் வடிவத்தோற்றம் உண்டாவதைக் குறைக்க உதவி செய்கிறது. அதன்மூலம், புற்றுநோய் செல்களில் மெடாஸ்டேடிஸ் (metastasis) வளரும் அபாயத்தையும் குறைக்கிறது     

திருநீற்றுப் பச்சிலை

 இலையை அரைத்துப் பூச கட்டி கரையும்.
 இலையை முகர்வதால் தலைவலி, இதய நடுக்கம், தூக்கமின்மை ஆகியவை சாந்தமாகும்.
. இலைச் சாறு, தேன் ஆகியவற்றைச் சமன் கலந்து 30 மி.லி. கொடுத்து வர மார்பு வலி , மேல் சுவாசம், இருமல், வயிற்று வாயு தீரும் -
. இலையை மெல்லுவதால் வாய் வேக்காடு தீரும்.
 இலையை வாட்டிப் பிழிந்த சாறு இரண்டொரு துளி காதில் விடக் காது மந்தம் தீரும் -
 . 5 கிராம் விதையை 100 மி.லி நீரில் போட்டு 3 மணி நேரம் ஊற வைத்துக் சாப்பிட வயிற்றுக் கடுப்பு, இரத்தக்கழிச்சல், நீர் எரிச்சல், வெட்டை ஆகியவை குணமாகும்..   

சுளுக்குப் பிடித்துக் கொண்டதா? எளிய இயற்கை முறை வைத்தியம்

பிரண்டையைக் கொஞ்சம் கொண்டு வந்து அதனை இடித்துச் சாறு பிழிந்து புளி, உப்பு, சிறிதளவு சேர்த்து அடுப்பிலேற்றி காய்ச்சி குழம்பு பதம் வரும் சமயம் இறக்கி, சூடு ஆறிய பின்பு சுளுக்கு உள்ள இடத்தில் மேல்பற்று போட்டு வரவும் . இந்த மாதிரி இரண்டு, மூன்று முறை பற்று போட்டு வந்தால் சுளுக்கு பூரண குணமடையும் .   

உடல் பருமன் குறைக்க நில ஆவரை சூரணம்

மெட்ட பாலிசத்தை அதிகரித்து உடலில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்புகள் ஏரித்து உடல் எடையை குறைக்க உதவும்.
அதிக அளவு பசியை எடுத்தலை அடைக்கும் இனால் கண்ட, கண்ட உணகளை சாப்பிடாமல் இருக்கலாம்
இரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகள் வெளியேற்றி இரத்தை சுத்தம் செய்யும்
நில அவரை 100 கிராம்
சோம்பு - 100 கிராம்
சுக்கு 100 கிராம்
கொத்த மல்லி 100 கிராம்
கற்கண்டு 100 கிராம்
ஆகிவற்றை சமன் எடுத்து கற்கண்டு தவிர மற்றவையை பொன் நிறமn க வருத்து கொள்ளவும் அரைத்து கற்கண்டையும் அரைத்து தூள் செய்து கலந்து காலை , மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட பெருவயிறு, உடல் எடை, வயிற்று வலி, பெறும் பாடு, கொழுப்பு , உடல் வலி, கை கால் வலி குறையும், மலக்கட்டு உடையும் , சுக பேதி உண்டாகும் , உடல் உபாதை குறையும்.

இந்துப்பு ( HIMALAYAN ROCK SALT)

சாதாரணமாக உப்பு கடல் நீரிலிருந்து எடுக்கபடும் ஆனால்,
இந்துப்பு இமயமலையின் ஒரு சிலபகுதிகளில் சுரங்கங்களிருந்து வெட்டி எடுக்கபடும் பாறை உப்பு இந்துப்பு (இந்தியில் சிந்தாநமக்) ஆகும்
இவை வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிறங்களில் இருக்கும் ,
இதை இமயமலையின் தங்கம் என்று அழைக்கபடுகிறார்கள்,
இது ஒரு பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான இயற்கை உணவு பொருள்,
சாதாரண கடல்நீரின் உப்பை விட இதற்கு மருத்துவகுணம் அதிகம்,
இதில் 86 வகையான கனிம சத்துகள் உண்டு
இவை பெண்களின் தைராய்டு பிரச்சனைக்கு தீர்வாகவும்,
சிறுநீரகம் (கிட்னி) சம்பந்தமான எந்தவொரு பிரச்சினைகளையும் சரி செய்யும்,
கல் அடைப்பு பிரச்சனையிலிருந்து விடுபடவுதான்
உப்புசத்து அதிகம் உள்ளவர்கள் இந்துப்பை தொடர்ந்து இரண்டு மாதங்கள் உபயோகபடுத்தும் பொழுது இரத்தின் உப்பின் அளவு சிராகி பிரஷ்ர், கால்கள் விக்கம் முழுமையாக சரி ஆகும்,
இதை தொடர்ந்து பயன் படுத்துவதன் மூலமாகவும், அல்லது இதை நீரில் சிறிதளவு கரைத்து கால்களில் 1 நிமிடம் நனைத்து வந்தால் நமக்குள் இருக்கும் நேர் எதிரான எண்ணங்கள் மாறி மனம் அமைதி பெற்று நல்ல தூக்கம் பெறலாம்,
இவை கண்களுக்கும் நல்லது என்று அகத்தியர் பாட்டில் உண்டு,
இனி வரும் காலங்களில் இயற்கையான முறையில் கிடைக்கும் பொருள்கள் மட்டுமே நன்மை மற்றும் ஆரோக்கியம் உண்டு, மற்றவை தீயவகள் என அறிந்து செயல்படுவோ   


அமுக்கிராப் பொடி

அமுக்கிராப் பொடி 5 கிராம், பிஸ்தா பருப்பு , பாதாம் பருப்பு, சாரப் பருப்பு வகைக் 3 கிராம், கசகசா 15 கிராம் இவற்றை அரைத்து 100 மி.லி. பாலில் கலந்து சர்க்கரையுடன் சேர்த்து காலையில் மட்டும் 3 முதல் 4 மாதங்கள் சாப்பிட்டு வர உடலுக்கு பலத்தையும் , இளமையையும் , நீண்ட ஆயுளையும் அளிக்கும்.
2  அமுக்கிராகிழங்கை அரைத்து புண், கட்டி, வீக்கம் போன்றவற்றில் பற்றுப் போட குணமடையும்
3. அமுக்கிராப் பொடியை தூதுவளைப் பொடியுடன் சம அளவு கலந்து 5 மி.லி. பால் அல்லது நெய்யுடன் தினமும் 2 அல்லது 3 வேளைகள் பத்திய முடன் உட்கொண்டு வந்தால், நீடித்த நோய்க்குப் பின் வரும் களைப்பு, சளிக் காய்ச்சல், தோல் நோய் , காது மந்தம் தீரும்,
4, அமுக்கிரா பொடியை தினமும் இரு வேளைகள் 2,4, கிராம் வீதம் தேனுடன் உட்கொள்ள வாதம், கபத்தினால் ஏற்படும் நோய்கள், உடல் பருமன், பசியின்மை நீங்கும்.
5 . அமுக்கிராப் பொடியை நெய்யுடன் கலந்து கொடுக்க, விந்துவைப் பெருக்கும். உடலுக்கு பலம் தரும்.
6. அமுக்கிராப் பொடி 1 பங்கும், கற்கண்டு 3 பங்கும். , சேர்த்து 5 கிராம் வீதம் தினமும் காலை, மாலை உட்கொண்டு 200 மி.லி பசும்பால் அருந்த நரம்புத் தளர்ச்சி நீங்கும். உடல் அழுகும், உறுதியும் பெருகும்
7. பொதுவாக அமுக்கராக் கிழங்கு அணைவருக்கும் ஏற்ற உடல் தேற்றி மருந்தாகும்.  

அத்தி

சதை, நரம்பை சுருங்கச் செய்யும் மருந்தாகவும் பழம் மலமிளக்கியாகவும் பிஞ்சு, பழம், பால் ஆகியவை சீதக்கழிச்சல், வயிற்றுக்கடுப்பு, நீரிழிவு நோயால் ( சர்க்கரை நோய்) உண்டாகும்
தாகம், நாவறட்சி , உடல் வெப்பம் முதலியவை நீங்கும் இரத்தம் சுத்தமாகும் , மூட்டு வீக்கம் , கீல்வாத நோய்கள், சர்க்கரை நோயால் ஏற்பட்ட புண்கள் போன்றவை .. நீங்கும்   

காது சொட்டு மருந்து

ஆமணக்கு எண்ணைய் _ 500 மி.லி.
சுக்கு - - 50 கிராம்
நொச்சி இலை 100 கிராம்
வெள்ளைப்பூண்டு 20 கிராம்
வலம்புரி இடம் புரிகாய் 4 காய்
ஆமணக்கு எண்ணெய்யில் மற்ற சரக்குகளை இடித்து, காய்ச்சி தைல பதத்தில் எடுத்துக் கொள்ளவும்.
வெளி உபயோகம் வலியுற்ற காதில் 2 -3 சொட்டுகள் வீதம் தினமும் 2 வேளைகள் விடவும்
காது வலி, காதில் நீர் வடிதல், காது குடைச்சல், காது இரைச்சல் தீரும்    

மருத மரம்.

சதை, நரம்புகளைச் சுருங்கச் செய்யும்
1. பட்டை 400 கிராம் 4. செம்பருத்தி பூ ஆகியவற்றைச் சிதைத்து 1 லிட்டர் நீரில் போட்டுப் பாதியாகக் காய்ச்சி காலை, மாலை 200 மி.லி. குடித்துக் காரம் , புளி குறைத்து உணவு உண்டு 1 மண்டலம் ஓய்வில் இருப்பின் இதய நோய் அனைத்தும் குணமாகும்.
2. பட்டை 100 கிராம், சித்தரத்தை 5 கிராம், திப்பிலி 10 கிராம், சுக்கு 15 கிராம் 1 லிட்டர் நீரில் தட்டிப் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி 100 மி.லி வீதம் தினம் 4 வேளை குடித்து வர என்புருக்கி, இரைப் பிருமல் (ஆஸ்துமா) தீரும்.
3. பட்டை 5கிராம் , நாவல் பட்டை 50 கிராம் , ஆலம் விழுது 50 கிராம், அரை லிட்டர் நீரில் இட்டுக் காய்ச்சிக் கால் லிட்டராக்கி வடிகட்டிக் காலை, மாலை 50 முதல் 100 நாள் வரை சாப்பிட மது மேகம் ( சர்கரை நோய்) தீரும்.
4. பட்டைத் தூளுடன் மஞ்சள், கரிசலாங்கண்ணித் தூள் சமன் கலந்து அரை தேக்கரண்டி அளவு காலை, மாலை தேனில் கொள்ளக் காமாலைக் கல்லீரல், மண்ணீரல் வீக்கம் குறையும்.
5. பட்டைத் தூளுடன் ஆடா தொடைச் சாறு 1 தேக்கரண்டி சேர்த்து வெள்ளாட்டுப் பாலில் கொள்ள நுரையீரல் புண் தீரும்.
6. பட்டைக் குடிநீரால் புண், புரை, ரணம், சொறி ஆகியவர் றைக் கழுவி , வர குணமாகும்
7. இலையை அரைத்து எழுமிச்சை அளவு காலை, மட்டும் சாப்பிட்டு வரப் பித்த வெடிப்பு, குன்மம், வயிறு வலி ஆகியவை தீரும்.    

நிலாவாரை

1. இலைக் அரைத்து தடவி வரச் சொறி , சிரங்கு, படை ஆறும். கூந்தல் உதிர்வதை தடுக்கும்.
2 . இலையுடன் மருதோன்றி இலை கூட்டி அரைத்துத் தடவச் செம்பட்டை முடி கறுக்கும்.
3 , நில ஆவாரை இலை, சோம்பு , சுக்கு, கொத்தமல்லி வகைக்கு 10 கிராம் 1 லிட்டர் நீரிலிட்டு 200 மி.லி யாகக் காய்ச்சிக் கற்கண்டு கலந்து சாப்பிடச் சுகப் பேதியாகும்
4. நில ஆவாரை இலையைத் துவையலாய் அரைத்து இரவில் பயன்படுத்த மலச்சிக்கல் தீரும்.

No comments:

Post a Comment